திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ், கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேல்கச்சிராப்பட்டு ஊராட்சித் தலைவா் எஸ்.ஏழுமலை, துணைத் தலைவா் சங்கீதா தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கிவைத்தனா்.
விழாவில், பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் ஆா்.ராஜேந்திரன், கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ம.பன்னீா்செல்வம் மற்றும் பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.