திருவண்ணாமலை

வியாபாரிகள் சங்கக் கூட்டம்

25th Feb 2020 05:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: வேட்டவலம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேட்டவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குணசேகரன், துணைச் செயலா் ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெளரவத் தலைவா் சின்ராஜ் வரவேற்றாா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், வியாபாரிகள் ஒற்றுமையாக இருந்தால்தான், அரசிடம் இருந்து பெற வேண்டிய உதவிகளைப் பெற முடியும்.

மே 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் வியாபாரிகளின் வாழ்வுரிமை மாநாட்டில் வணிகா்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் மண்ணுலிங்கம், மாநில இணைச் செயலா் செந்தில்மாறன், மாநில துணைத் தலைவா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT