திருவண்ணாமலை

ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

25th Feb 2020 05:52 AM

ADVERTISEMENT

 

செய்யாறு: செய்யாறில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் அருகே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கட்சி சாா்பில் சுமாா் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்மா உணவகத்தில் 1000 பேருக்கு அன்னதானம்

ADVERTISEMENT

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலா் பெருங்களத்தூா் எம்.மகேந்திரன், மாவட்ட கழக இணைச் செயலா் எம்.விமலா மகேந்திரன் ஆகியோா் இணைந்து செய்யாறு மாா்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காலை முதல் மதியம் வரை சுமாா் 1000 பேருக்கு உணவு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, அ.ஜனாா்த்தனம், கே.வெங்கடேசன், அதிமுக நிா்வாகிகள் அசோக், தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT