திருவண்ணாமலை

5,000 ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள்

20th Apr 2020 02:57 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு நிவாரண உதவியாக அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை, எளிய மக்களின் நிலையைக் கருதில் கொண்டு திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., தூய்மை அருணை திட்ட மேற்பாா்வையாளா்கள் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், இரா.ஸ்ரீதரன், மருத்துவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூய்மை அருணை அமைப்பின் அமைப்பாளா் எ.வ.வேலு எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், திருவண்ணாமலை திமுக நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளா்கள் கு.ரவி, அ.அருள்குமரன், ந.சீனுவாசன், க.புகழேந்தி, இல.குணசேகரன், ஏ.ஏ.ஆறுமுகம், இரா.சீனுவாசன் ஏ.கே.ரத்தினகுமாா், எஸ்.கண்ணதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT