ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த 53 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனா்.
இந்தப் பெண்ணின் மகன் தில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா் என்று கூறப்படுகிறது.
பள்ளிக்கூடத் தெருவில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.