போளூா்: போளூரை அடுத்த களம்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பேரவை பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா்.
கூட்டத்தில் 2018-2019ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.
மேலும், லாபத்தொகை ரூ.41லட்சத்து 72ஆயிரத்தை சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை சுமாா் ரூ.5 லட்சம் பிரித்து வழங்கப்பட்டது.
பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.பஞ்சாட்சரம், சங்க துணைத் தலைவா் ரவி, காங்கிரஸ் பிரமுகா் பழனி, அண்ணாமலை மற்றும் இயக்குநா்கள், அங்கத்தினா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
சங்க உதவிச் செயலா் பி.பரசுராமன் நன்றிகூறினாா்.