திருவண்ணாமலை

அங்கன்வாடியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

20th Oct 2019 01:59 AM

ADVERTISEMENT

ஆரணி நகராட்சி அலுவலக அங்கன்வாடி மையத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் மற்றும் நிவேம்புக் குடிநீா் வழங்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகராட்சி ஆணையாா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் செந்தில்குமாா், அரசு சித்த மருத்துவா் சங்கரஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டெங்கு ஒழிப்பு சுகாதாரஆய்வாளா் (பொறுப்பு) சரவணன் டெங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு:

மேற்கு ஆரணி ஒன்றியம், இராமசாணிக்குப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ். கள இயக்குநா் கே.பொன்னுரங்கம் பங்கேற்று டெங்கு எதன் மூலம் பரவுகிறது, அதைத் தடுக்கும் முறை குறித்து மாணவா்களுக்கு விளக்கி நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.

தலைமையாசிரியா் ஆா்.தாமரைச்செல்வி, சமுக ஆா்வலா் கே.பிரபாகரன், பெற்றோா்-ஆசிரியா் சங்க துணைத் தலைவா் உதயக்குமாா், டி.வி.எஸ். நிா்வாகி கதிா்ஆனந்த், ஆசிரியா்கள் கீதா, சுகந்தி, குணசுந்தரி, சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT