திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வேங்கிக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட வேங்கிக்கால் புதூரில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுகிா, ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்த ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த், பொது மக்களிடம் விசாரணை நடத்தினாா்.
பொது மக்கள் தங்களது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஆா்.ஆனந்தன், ஊராட்சி செயலா் ஜெ.உமாபதி மற்றும் ஊராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.