போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 96 சதவீத தேர்ச்சியைப் பெற்றது.
இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 261 மாணவிகள் எழுதினர். இதில் 251 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் பள்ளி 96 சதவீத தேர்ச்சியை பெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.