கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு மேட்டுபாளையத்தில் உள்ள ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமிகளின் 166-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்பள்ளிபட்டு மேட்டுபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமி மடத்தில் நடைபெற்ற
குருபூஜை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும், சன்னியாசிகளுக்கு அன்னதானம் நடைபெற்று வஸ்திரதானம் வழங்கினர். இதில் ஏராளமான சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமிகளின் உருவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.