போளூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதைக் கண்டித்து, போளூரில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சாா்பில் அந்த மசோதாவின் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தாக்பாஷா தலைமை வகித்தாா். பொருளாளா் சுபான் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ரியாஸ் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை மாவட்ட நிலஎடுப்பு (பொறுப்பு) டிஎஸ்பி சரவணகுமரன், காவல் ஆய்வாளா்(பொறுப்பு) நந்தினி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.