கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்து திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலாரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வில்வாரணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்தை வட்டார தலைமை மருத்துவர் கு.மணிகண்ட பிரபு வழங்கி தொடக்கிவைத்தார்.
இதில் சுகாதார செவிலியர்கள் அம்பிகா, ரேவதி, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.