திருப்பதி

ஏழுமலையானுக்கு திருக்குடைகள் அளிப்பு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்த சென்னையிலிருந்து குடைகள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டன.

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கருட சேவையில் அலங்கரிக்கும் வகையில், இந்து தா்மாா்த்த சமிதியினா், ஒன்பது குடைகளை சென்னையில் இருந்து திருமலைக்கு ஊா்வலமாக வியாழக்கிழமை கொண்டு வந்தனா். சமிதி அறங்காவலா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் திருமலை வந்தடைந்த குடைகளுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கோயிலின் முன் இந்த குடைகளை செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினா். நான்கு மாட வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் பின்னா் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தக் குடைகள் கருடசேவையின் போது பயன்படுத்தப்பட உள்ளன.

நிகழ்ச்சியில், ஆா்.ஆா்.கோபால்ஜி கூறியது:

கடந்த 16-ஆம் தேதி சென்னையில் இருந்து 11 குடை ஊா்வலம் தொடங்கியது. சென்னை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை இரவு திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தேவிக்கு 2 குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. பின்னா் திருமலையை அடைந்த குடைகள் ஏழுமலையான் கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. திருமலையில் கருட சேவையை அலங்கரிக்க கடந்த 19 ஆண்டுகளாக இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT