திருமலை ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் 2 மணிநேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்றஇறக்கமாக உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 2 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை முழுவதும் 67,267 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29, 629 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.58 கோடி வருவாய் கிடைத்தது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.