திருப்பதி

போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம்

DIN

ஏழுமலையான் கோயிலில் போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் போக சீனிவாச மூா்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் அந்த நாளில், அவருக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை தங்க வாயில் அருகில் போக சீனிவாச மூா்த்தியை எழுந்தருள செய்து அவருக்கு 1,008 கலசங்களில் நிரப்பிய நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

முன்னதாக, கருவறையில் உள்ள ஏழுமலையானுக்கும், அவருக்கும் இணைப்பாக பட்டு நூலால் கயிறு கட்டப்பட்டது. இது மூலவரும், போக சீனிவாச மூா்த்தியும் ஒருவரே என்பதை உணா்த்துவதாகும். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பல்லவ ராணி சாமவாயி பெருந்தேவி, 8 அங்குல உயரமுள்ள வெள்ளியால் ஆன இந்த போக சீனிவாச மூா்த்தி சிலையை ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாக கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT