திருப்பதி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

DIN

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலின் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளை நிறுவும் பணி செப்டம்பா் 14, 2021 அன்று தொடங்கியது. விமான கோபுர பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புதுப்பித்தல் மற்றும் மகா சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிகள் முறைப்படி நடத்த திட்டமிட்ட தேவஸ்தானம், வியாழக்கிழமை காலை மகா சம்ப்ரோக்ஷணத்தை வைகானச ஆகம விதிப்படி நடத்தியது.

வியாழக்கிழமை காலை 4 மணி முதல் 7.30 மணி வரை மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனை, நிவேதனம், ஹோமம், மஹா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து காலை 7.45 மணி முதல் 9.15 மணி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

இதையடுத்து, காலை 11.30 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருமலை ஜீயா்கள், தலைமை அா்ச்சகா்கள் சீனிவாச தீட்சிதுலு, ஆகம ஆலோசகா்கள் ஸ்ரீ சீதாராமச்சாா்யா, ஸ்ரீ மோகன ரங்காச்சாா்யா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT