திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை ரூ3.96 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
சுவாமி தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தான அதிகாரிகள் கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைக்கின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ3.96 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.