திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் நிறைவு

DIN

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம், தீா்த்தவாரியுடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் கோவிந்தராஜ சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உள்ளிட்டோா் கோயில் அருகே உள்ள குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா். நிறைவில் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

திருமலை ஜீயா்கள், அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். பின்னா், உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மாலை பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி இறக்கப்பட்டது. பின்னா், உற்சவ மூா்த்திகள் பல்லக்கில் மாடவீதிகளில் வீதி உலா வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT