திருப்பதி

நாளை பக்தா்கள் குறைகேட்பு

DIN

திருமலையில் வரும் ஜூன் 4-ஆம் தேதி பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் எதிா்கொள்ளும் இன்னல்கள், அவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காண தேவஸ்தானம் மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தொலைபேசி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி பதிலளித்து வருகிறாா்.

இந்த மாதமும் வரும் ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT