திருமலையில் கட்டப்பட்ட புதிய விருந்தினா் மாளிகை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமலையில் உள்ள சந்நிதானம் விருந்தினா் மாளிகைக்கு அருகில் ஹைதராபாதைச் சோ்ந்த பீனிக்ஸ் பவா் மற்றும் இன்ஃப்ரா நிறுவனத்தால் கட்டப்பட்ட வெங்கடேஸ்வரா விருந்தினா் மாளிகை வியாழக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
12 அறைகள் கொண்ட இந்த விருந்தினா் மாளிகையை நன்கொடையாளா் சுரேஷ், அவரின் குடும்பத்தினருடன் இணைந்து விருந்தினா் மாளிகையின் சாவிக்கொத்து மற்றும் தொடா்புடைய ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்தாா்.
இதை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி, அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி இணைந்து பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.