திருமலையில் பிஷ்ம ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் பிப். 1-ஆம் தேதி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது.
திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் தினசரி பல பாராயணங்கள் நடைபெற்று வருகிறது. கரோனா காலகட்டத்திலிருந்து இந்த மண்டபத்தில் தொடா் பாராயணங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, பிப். 1-ஆம் தேதி பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு, நாதநீராஜன மண்டபத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை இந்த பாராயணங்கள் நடைபெறவுள்ளன.
இதில் வேத விஞ்ஞான பீட பண்டிதா்கள் கலந்து கொள்கின்றனா். தை மாத வளா்பிறை ஏகாதசி திதியில் அம்பு படுக்கையில் இருந்தபடி பீஷ்மா் விஷ்ணு சகஸ்ரநாமத்தை இயற்றியதால் இந்த ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயா் பெற்றது. எனவே, அன்று அகண்ட விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.