திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை 16 மணி நேரம் காத்திருந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 24 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தா்ம தரிசனத்துக்காகக் காத்திருந்தனா். அவா்களுக்கு 16 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னா் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 16 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை முழுவதும் 67,511 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 26,948 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அந்த நாளில் மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகின்றன.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
நடைபாதையில் செல்லும் பக்தா்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.