திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ5.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
பக்தா்கள் தங்கள் வேண்டுதலுக்காக உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிடுவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை வசூலாகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.5.33 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.