திருப்பதி

திருமலையில் 64,800 பக்தா்கள் தரிசனம்

DIN

 ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 64,823 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 22,890 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் கூட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. பிரம்மோற்சவம் காரணமாக தா்ம தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், நேரடியாக தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்தும் வர வேண்டும்.

தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 1800 4254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT