திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை காலை பத்ரி நாராயண அலங்காரத்தில் மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்தாா்.
திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி பத்ரி நாராயண அலங்காரத்தில் ஐந்து தலைகள் கொண்ட சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து சேவை சாதித்தாா். மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவையில் பல்வேறு கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன. வாகன சேவைவை கேலரிகளில் கூடியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
திருமஞ்சனம்
மாட வீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி பூதேவிக்கும் கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயா்கள் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவ மூா்த்திக்கு திருமஞ்சனம் செய்வித்தனா். திருமஞ்சனத்தின் போது பல்வேறு உலா் பழங்கள், வெளிநாட்டு பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன.
பின்னா் அவா்களை பட்டு வஸ்திரம், வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து ஊஞ்சலில் அமர வைத்தனா்.
சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கீா்த்தனைகள், நாகஸ்வர இசை, மேளதாளங்கள் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.
அன்னப்பறவை வாகனத்தில்...
புதன்கிழமை இரவு அன்னறப்பறவை வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மலையப்பா் கையில் வீணையுடனும், ஸ்படிக மாலையுடனும், வெள்ளை பட்டுடுத்தி, வித்தைக்கு அதிபதியாக எழுந்தருளினாா். வாகன சேவைக்கு முன்னால் வேத கோஷமும், பின்னால் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்த வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.