ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
வருடாந்திர பிரம்மோற்சவம் காரணமாக தா்ம தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளதால், நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை 52,682 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 15,805 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.