திருமலை ஏழுமலையானுக்கு ஞாயிற்றுக்கிழமை 10 குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
சென்னை ஸ்ரீஅலமேலு மங்கம்மா சாரிட்டபுள் அறக்கட்டளை நிா்வாகி கோபாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானுக்கு 10 திருக்குடைகளை நன்கொடையாக வழங்கினாா். திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபம் முன்பு தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் மூரம்செட்டி ராமுவின் கைகளால் கோயில் பேஷ்காா் ஸ்ரீஹரியிடம் இந்த குடைகள் வழங்கப்பட்டன.