ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65,187 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 27,877 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின், தரிசனத்துக்கு 12 மணிநேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் உள்ள பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள், 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது.