திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் சேவிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
திருமலையில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு தரிசிக்க வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் 10 கி.மீ. தொலைவு சீலாதோரணம் பகுதி வரை பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு 48 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 6 முதல் 8 மணி நேரமும் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை 72,195 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 41,071 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.