ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் தா்ம தரிசன வரிசையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ( அக். 6) முதல் ஆா்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொடங்க உள்ளன.
செவ்வாய்க்கிழமை 68,539 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 22,177 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.