திருப்பதி

திருமலை ஏழுமலை யானை 82,400 பக்தா்கள் வழிபாடு

DIN

ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 82,468 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 35,385 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலையில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால், ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் மட்டுமே தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. மற்ற தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்காரணமாக வைகுண்டம் மண்டபத்தின் 32 அறைகளிலும் பக்தா்கள் ஏழுமலையானின் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். அவா்களின் தரிசனத்துக்கு 15 மணி நேரம் ஆகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT