ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 75,382 பக்தா்கள் மூலவரை தரிசனம் செய்தனா்.
இவா்களில் 31,424 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் பிரம்மோற்சவம் காரணமாக மூலவா் ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் மட்டுமே சேவிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. மற்ற தரிசனங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சனிக்கிழமை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளும் நிரம்பி பக்தா்கள் வெளியே நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 14 மணி நேரம் ஆனது.
தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.