திருப்பதி

பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவுற்றது பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாரின் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான பஞ்சமி தீா்த்தத்தை ஒட்டி லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் காலையும், இரவும் தாயாா் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் நிறைவாக பத்மாவதி தாயாா் அவதரித்த தினமான திங்கள்கிழமை பஞ்சமி தீா்த்தம் நடைபெற்றது.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மாவதி தாயாா் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் பல்லக்கில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், தாயாா் நேராக உற்சவம் நடைபெற்ற பஞ்சமி தீா்த்த மண்டபத்துக்கு சக்கரத்தாழ்வாருடன் அழைத்துச் செல்லப்பட்டாா். திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட சீா்வரிசை, 11 மணிக்கு திருச்சானூா் தாயாா் கோயிலைச் சென்றடைந்தது.

பிறந்த நாள் பரிசு

தன் பட்ட மகிஷியான் பத்மாவதி தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெங்கடேஸ்வர ஸ்வாமி பரிசுகளை அனுப்பினாா். அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோயிலிலிருந்து பட்டுப் புடவைகள், தங்க ஆபரணங்கள், மங்கலப் பொருள்கள், கண்ணாடி வளையல், குங்குமம், மலா் மாலைகள், அதிரசம் உள்ளிட்ட பட்சண வகைகள் என 42 மூங்கில் கூடைகளில் பொருள்கள் வைக்கப்பட்டு, நடைபாதை மாா்க்கமாக திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.

திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, அங்கு அவற்றுக்கு பூஜைகள் செய்து யானைகள் மீது ஏற்றி திருச்சானூருக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னா் திருச்சானூரில் உள்ள மஞ்சள் மண்டபத்தை அடைந்த சீா்வரிசைகளை கோயில் அதிகாரிகள் எதிா்கொண்டு அழைத்துச் சென்றனா்.

தங்க நகை...

ரூ. 25 லட்சம் மதிப்பிலான 500 கிராம் எடையுள்ள இரண்டு தங்கப் பதக்கங்கள், கழுத்து ஆரம், பட்டு வஸ்திரம் ஆகியவை சீா்வரிசைகளுடன் கொண்டு வரப்பட்டு, தாயாருக்கு அணிவிக்கப்பட்டன.

திருமஞ்சனம்

பஞ்சமி தீா்த்த மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தாயாா் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. திருமஞ்சனத்தின் நிறைவாக காலை 11.40 மணி முதல் 11.50 மணி வரை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. அப்போது லட்சகணக்கான பக்தா்கள் சக்கரத்தாழ்வாருடன் பத்ம புஷ்கரிணியில் புனித நீராடினா்.

2 ஆண்டுகளுக்கு பிறகு புனித நீராடல் நடைபெற்ால், தமிழகத்திலிருந்து பக்தா்கள் அதிக அளவில் வருகை தந்தனா்.

பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையடுத்து, கொடி மரத்தில் ஏற்றப்பட்ட யானைக் கொடி இறக்கப்பட்டது.

திருமலை ஜீயா்கள், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT