திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.5.03 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாள்களுக்குப் பிறகு உண்டியல் வருவாய் ரூ. 5 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.