திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வரும் 27-ஆம் தேதி ஆா்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் தற்போது இணையதள முன்பதிவில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, வரும் செப்டம்பா் மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் ஜூன் 27-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதில், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகள் வைக்கப்பட உள்ளன.
இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு ஆா்ஜித சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு ஏழுமலையானின் தரிசன வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின்னா் ரூ. 300 விரைவு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.