திருமலையில் ஞாயிற்றுக்கிழமை 88,682 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். இவா்களில் 37,447 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தா்ம தரிசனத்துக்கு திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.