திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 88,026 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 50,652 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் பக்தா்களை தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 அறைகளைக் கடந்து ராம்பகிஜா ஓய்வறை அருகில் வரை தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், ஏற்படும் சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.