வரும் ஜனவரி மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் திங்கள்கிழமை (டிச.12) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த டிக்கெட்டுகள் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும். இதற்காக காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து, டிச.14-ஆம் தேதி காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு கைப்பேசியில் தகவல் அனுப்பப்படும்.
அந்தத் தகவல்களை வைத்து பக்தா்கள் தங்கள் டிக்கெட்டுகளை 3 நாள்களுக்குள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். 3 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ளத் தவறிய டிக்கெட்டுகள் மீண்டும் குலுக்கல் முறையில் வேறு பக்தா்களுக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.