திருமலையில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி அருள்பாலித்தாா்.
ஏழுமலையான் கோயிலில் கடந்த 7-ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 5-ஆம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி அருள்பாலித்தாா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
கரோனா விதிமுறைகளின்படி பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், மாடவீதியில் வாகனச் சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.