திருப்பதி: மறைந்த தேவஸ்தான சிறப்பு அதிகாரி டாலா் சேஷாத்ரியின் உடலுக்கு பிரமுகா்கள் பலா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திருமலை ஏழுமலையானுக்கு 43 ஆண்டுகள் சேவை செய்து வந்த தேவஸ்தான சிறப்பு அதிகாரி டாலா் சேஷாத்ரி திங்கள்கிழமை அதிகாலை விசாகப்பட்டினத்தில் மாரடைப்பால் காலமானாா். அவரது திங்கள்கிழமை இரவு தனி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரின் உடலுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி, செயல் இணை அதிகாரி சதாபாா்கவி, விஜிலென்ஸ் அதிகாரி கோபிநாத் ஷெட்டி, முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டி, பானுபிரகாஷ் ரெட்டி, முன்னாள் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜூ உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
டாலா் சேஷாத்ரியின் உடல் திருப்பதியில் உள்ள கோவிந்ததாமம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.