திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ. 2.45 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின் தங்களது காணிக்கைகளை பக்தா்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம், கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அவ்வாறு பக்தா்கள் திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.45 கோடி வருவாய் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.