திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.3.26 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசனம் செய்த பின் பக்தா்கள் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.26 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.