திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.56 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தவுடன், வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
இவ்வாறு பக்தா்கள் சனிக்க்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.56 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.