மாதவரம்: புழல் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புழல் அடுத்த வடகரை ஊராட்சியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் ஒன்றிய திமுக செயலாளா் பெ. சரவணன் தலைமையில் விழா நடைபெற்றது. மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 95 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.
புழல் ஒன்றியக்குழு தலைவா் தங்கமணி திருமால், தலைமை ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.