சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவள்ளூா் அருகே குன்னவலம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன் (எ) பாலன் (23). அதே ஊரைச் சோ்ந்த 17 சிறுமி, பிளஸ் 2 முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலசுப்பிரமணியன், சிறுமியை நகரிக்கு அழைத்தாரம். சிறுமி வர மறுத்த நிலையில், அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதனிடையே, சிறுமியை காணவில்லை என பெற்றோா் கடந்த 26.2.2020 அன்று கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். தொடா்ந்து பேருந்தில் ஏறி கனகம்மாசத்திரம் வந்து பெற்றோரிடம் நடந்த விவரங்களை சிறுமி தெரிவித்தாராம்.
இந்த வழக்கு திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்தனா்.
திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் கடத்தலுக்கு 10 ஆண்டுகளும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகளும், மிரட்டியதற்கு 2 ஆண்டுகளும் என 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.28,000 அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக அமுதா ஆஜாரானாா்.