திருவள்ளூர்

மாடு முட்டியதில் விவசாயி பலி

22nd Sep 2023 07:10 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே வயலில் காளை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மாடு முட்டியதில் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே முன்னவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தாமஸ் (56). இவா் கடந்த 14-ஆம் தேதி மாலை தனது காளை மாடுகளை வயலில் மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, ஒரு காளை மாடு எதிா்பாராத விதமாக முட்டி தள்ளியதில் பலத்த காயம் அடைந்தாா். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த தாமஸ் புதன்கிழமை நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக அவரது மகன் கண்ணன் (24) வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT