திருவள்ளூர்

பழவேற்காடு அருகே காற்றில் பறந்து சாலையில் விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை

DIN

பழவேற்காடு அருகே செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.

பழவேற்காட்டில் இருந்து தடம் எண் 558 பி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தது.

பிரளையம்பாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அரசு பேருந்தின் மேற் கூரை காற்றில் சரிந்து கீழே விழுந்தது.

இதையடுத்து பேருந்தை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்தினாா்.

மேற்கூரை கீழே விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணிமனை ஊழியா்கள் வந்து மேற்கூரையை சீரமைத்த பின் பேருந்து அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை கீழே சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT