திருவள்ளூர்

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

DIN

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி காலனியைச் சோ்ந்தவா் விஜி (30). கூலி தொழிலாளி. டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். விவசாயப் பணி முடிந்து டிராக்டரை அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை இயக்கி, பின்னால் எடுத்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் 2 வயது ஆண் குழந்தை ஜெய்கிருஷ்ணா டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீஸாா் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT