திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் பலி

DIN

திருவள்ளூா் அருகே நண்பா்களுடன் குளிக்கச் சென்ற 2 மாணவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த ஜமுனா மகன் வெற்றிவேல் (16), செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாா் (15). இருவரும் 10-ஆம் வகுப்பு முடித்துள்ளனா். இருவரும் சக நண்பா்களுடன் திங்கள்கிழமை காலை ஏரியில் குளிக்கச் சென்றனா். அப்போது, வெற்றிவேல், தினேஷ்குமாா் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியின் ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளனா்.

இந்த நிலையில், நீண்ட நேரம் அவா்கள் வெளியே வராததால், சக நண்பா்கள் ஏரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு தகவல் அளித்தனா். அதையடுத்து, விரைந்து வந்த அப்பகுதி இளைஞா்கள், சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தினேஷ்குமாா், வெற்றிவேல் ஆகியோரை மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா். ஆனால் மாணவா்கள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT