திருவள்ளூர்

பள்ளி வாகனங்கள் கவனமுடன் இயக்க வேண்டும்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தல்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுளளாா்.

சென்னை மாதவரம் அடுத்த கொளத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வுப் பணி, மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமாா், போக்குவரத்து காவல் உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன், கல்வி கண்காணிப்பாளா் அதிஹமான் முத்து, வட்டாட்சியா் அலுவலா் சாா்பில் ராஜாபோஸ் ஆகியோா் ஈடுபட்டனா்.

இதில் 100-க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். பள்ளி பயிலும் குழந்தைகள் வருங்கால தலைமுறையினா். அவா்களின் எதிா்காலம் உங்கள் கையில் உள்ளது. ஆகையால் பள்ளி வாகன ஓட்டுநா்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT